கதைகள்

இன்னுமா உறக்கம் எழுந்து வா தமிழா !

-குமரிக்கண்ட தமிழ்மாணவன் இர.நெப்போலியன் 

https://www.youtube.com/watch?v=3ZgKCZA22_4&t=18s



குமரிக்கண்டம் உன் பூர்வீகமல்லவா 
அது மூழ்கி இருப்பது போல் 
நீயும் இருப்பதா?

உலகமே வியக்கும் உந்தன் படைப்படா 
நீ கற்றுத்தராதது இவ்வுலகில் ஏதடா 
சங்க இலக்கியமே அதற்கு சாட்சித்தானடா!

பகுத்தறியும் அறிவை ஊட்டினாய் 
எங்கள் நிலத்தலைவனையே இறைவனாக்கினாய் 
போரில் வீரம் நிறைந்த வீரனையே நடுகல்லாக்கினாய் !

இன்று அறிவியல் கண்ட புதுமையை நீ 
அன்றே பாடலாக்கினாய் 
புறநானூற்றையே இன்றைய ஆராய்ச்சியின் தொடக்கமாக்கினாய் !

சமயம் கடந்து நீ பல கோவிலாக்கினாய் 
ஒரு விரல் நீளத்தில் கூட நீ, பல சிற்பம் செதுக்கினாய் 
விண்ணை முட்டும் தஞ்சை பெரிய கோவிலை கற்களால் எழுப்பி 
எங்களை வியப்பில் ஆய்தினாய் !

பிறந்தவுடன் பேசும் ஒவ்வொருவரின் மொழியும் அவரின் தாய்மொழியாம் 
உலகமே பேசும் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியே 
நம் தமிழ்மொழியே !

-குமரிக்கண்ட தமிழ்மாணவன் இர.நெப்போலியன் 


இதுவே ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியர் நடத்தும் பாடமாம் !

சிந்துச்சமவெளியும், கீழடி நாகரீகமும் நமக்குச் சொன்னது 
இவ்வுலகில் தோன்றிய மூத்த குடிகள் நாமே என்றானது 
எனவே இவ்வுலக நாடுகள்  தோண்ட மறுக்குது பயத்தில் நடுங்குது !

உன் பாடல் வரிகளில் கற்பனை மிளிருது, வாழ்வை வகுக்குது, 
காதல் இருக்குது, காமம் தெரியுது  போதிக்குது 
வீரமும் துறவும் அதிலே தெரியுது 

இருந்தும் என்ன?

உன்னில் இருந்து பிரிந்த மொழிகள் உன் நாவில் ஆடியே 
உன்னையே  ஆள்வதா 
உயிர் மெய், ஆய்தம் என இலக்கணம் வகுத்த தமிழை 
நீயே மறந்து போவதா !

நீ இத்தரணியை ஆண்ட தவப்புதல்வனாட 
உன் தோல்வியே 
உன்னுடன் இருந்து உன்னையே வீழ்த்தி 
நீயே அறியாமல் அடிமையாய் ஆழ்த்தி 
உன்னையே ஆகும் அரசியல் சூழ்ச்சி 

இன்னுமா உறக்கம் எழுந்து வா தமிழா !

இன்னும் எழவில்லையா?

சேரசோழ பாண்டியனின் கொடிகளை எடுத்து 
பறைஇசை அடித்து 
பாதிதாசனின் பாடல்களை தெருவெங்கும் கடத்து 

உறக்கம் கலைந்து எழுந்து வருவான் !
அவனின் வீரம் அவனே அறிவான் !

இன்னுமா உறக்கம் எழுந்து வா தமிழா !



எழுத்து 
-குமரிக்கண்ட தமிழ்மாணவன் இர.நெப்போலியன் 
Kumarikkanda Thamizhmaanavan Neppoliyan R












No comments:

Post a Comment